சிக்கிம் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஏகப்பட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
RBI ன் அதிரடி முடிவு..ஊதிய வரம்பு உயர்வு – அறிக்கை வெளியீடு!
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஏப்ரல் 1, 2006 மற்றும் அதற்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பதவிகளில் நீடிப்பவர்களுக்கும் பரிசீலிக்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது.