தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வரின் முடிவு என்ன?
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து முதல்வர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல்வரின் முடிவே இறுதியானது என்பது தெளிவாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு திமுகவினர் வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் ஊதியமும் உயர்ந்துள்ளது. கொரோனா பேரிடர் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. அதனால் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அடுத்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மே 26ம் தேதி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஜூன் மாதம் 16ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை – அரசு அதிரடி உத்தரவு! காரணம் என்ன தெரியுமா?
இந்த நிலையில் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது முதல்வர் எடுக்கும் முடிவுக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவே இறுதி முடிவு என்பது தெரிகிறது. தற்போது முதல்வர் எடுக்க போகும் முடிவு என்ன என்பது குறித்து ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.