சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை – அரசு அதிரடி உத்தரவு! காரணம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் பல்வேறு தடைகளுக்கு பிறகு நாளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தர உள்ளார். அதனால் சென்னையில் இன்று முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
ட்ரோன்கள் பறக்க தடை
தமிழகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தருவதாக கூறப்பட்டது. ஆனால் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பிரதமரின் வருகை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை தினம் தமிழகத்திற்கு பிரதமர் வருகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு 22,000 போலீசாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி நாளை பிரதமர் மோடி பிற்பகல் 03.55 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இந்திய விமான படை விமானத்தின் மூலமாக சென்னைக்கு புறப்படுகிறார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மாலை 05.10 மணிக்கு வந்து இறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதமரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்க இருக்கின்றனர். அதன் பின் சென்னையில் நிகழ்ச்சி நடைபெற உள்ள பெரியமேடு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 05.45 மணிக்கு வருகிறார்.
நாடு முழுவதும் பள்ளிகள் மூடல், ஊழியர்களுக்கு WFH அமல் – அரசு தீவிர நடவடிக்கை!
பிரதமர் வருகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தற்போது சென்னையில் நாளை ட்ரோன் உள்ளிட்ட வான்வழி வாகனங்கள் பறக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.