ஓலா ஸ்கூட்டர்கள் முதல் இரண்டு நாட்களில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை செப்டம்பர் 15ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், முதல் இரண்டு நாட்களில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா ஸ்கூட்டர்கள்:
ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக அதிகாரபூர்வ தகவலில் இருந்து தெரிகிறது. முதல் நாளில், வினாடிக்கு நான்கு மின்சார ஸ்கூட்டர் என்ற விகிதத்தில், 600 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தற்போது இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், ‘ஓலா எஸ் 1, ஓலா எஸ் 1 புரோ’ மின்சார ஸ்கூட்டர்களை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வலியுறுத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
இதனால் பங்கு சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்து உள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் நேரடியாக தங்களை பதிவு செய்து, முதலீடு செய்ய விரும்பாத அன்னிய முதலீட்டாளர்கள், பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக முதலீடு செய்யலாம். இதற்காக ‘ பி – நோட்’ ‘பி – நோட்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் கடந்த மாதத்தில் மட்டும் 97,744 கோடி ரூபாய்க்கு பங்குள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பி – நோட் முதலீடுகளின் மதிப்புகள் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
TN Job “FB Group” Join Now
மத்திய வர்த்தக துறை அமைச்சகம் டிசம்பர் 31ம் தேதிக்குள் நிலுவை தொகை ‘ரெடி’ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள பாக்கித் தொகையை பெற, ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய ‘ஆன்லைன்’ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதேபோன்று, ரெடிங்டன் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 3,500 சில்லரை விற்பனையகங்கள் வாயிலாக தங்களின் போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ரெடிங்டன் இந்நிறுவனம், இந்தியாவில் எச்.டி.எப்.சி., வங்கியுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சில சலுகைகளையும் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.