திருப்பதி பிரம்மோற்சவம் தொடர்பாக தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!
கொரோனா 3ம் அலை பரவல் அபாயம் இருப்பதால் திருப்பதி தேவஸ்தானம் வர இருக்கும் பிரம்மோற்சவம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை பக்தர்களுக்கு தெரிவித்துள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவம்:
கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக உருவான கொரோனா பேரலையால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் வழிபடுவதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா 2 ஆம் அலை தொற்று பரவலால் இந்த ஆண்டு துவக்கம் முதல் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்த இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பாதிப்பு குறைந்த நாட்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
ஓலா ஸ்கூட்டர்கள் முதல் இரண்டு நாட்களில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை – அதிகாரபூர்வ அறிவிப்பு!
கொரோனா 3ம் அலையின் தாக்கம் நாட்டில் பரவுவதை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, கொரோனா 3ம் அலை பரவல் இனி வரும் 3 மாதங்களுக்கு அதிகமாக இருக்கும். இதனால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தகவல் அளித்துள்ளன. எனவே தான் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி தற்போது அளிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அடுத்த மாதம் ஏழாம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. வழக்கம் போல், பிரமோற்சவ நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் நோய் பரவல் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும். பிரமோற்சவ சாமி ஊர்வலம் கோவில் மாட வீதிகளில் நடைபெறாது என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் பக்தர்கள் கவலையில் உள்ளனர்.