தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவ.01ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்துடன் இந்த மாவட்டமானது நவம்பர் 1ம் தேதி அன்று இணைந்ததால் இந்த தினத்தை நினைவு கூறும் பொருட்டு அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் ஆனது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை, தோவாளை, கல்குளம், விளவங்கோடு, தேவிகுளம், நெய்யாற்றின்கரை, சித்தூர் பீர்மேடு ஆகிய 9 தாலுகாக்களில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. மேற்க்கண்ட 9 தாலுகாக்களை தமிழகத்துடன் இணைப்பதற்காக 1945ம் ஆண்டு நாகர்கோவிலில் ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்காக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் 1954ம் ஆண்டு போராட்டக் களமானது தீவிரமடைந்ததால் பீர்மேடு தேவிகுளம் தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஆனாலும் போராட்டம் ஒடுக்கப்பட முடியவில்லை என்பதால் கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்று அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் செங்கோட்டை தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
மன அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் புதிய திட்டம் – அமைச்சர் தொடக்கி வைப்பு!
Follow our Instagram for more Latest Updates
தற்போது இத்தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் ஆனது நவம்பர் 1ம் தேதி அன்று இணைக்கப்பட்டதை நினைவுக்கூறும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு நவம்பர் 1ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்பட்டு இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 12ம் தேதி அன்று வேலை நாளாக நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.