மன அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் புதிய திட்டம் – அமைச்சர் தொடக்கி வைப்பு!
தமிழகத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளவர்களை மீட்டெடுக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.
மனநல சேவை திட்டம்:
தமிழக சுகாதாரத்துறை மக்களின் உடல் நலத்தை பேணி காப்பதோடு சேர்த்து அவர்களது மன நலனினும் அக்கறை கொண்டு வருகிறது. அண்மையில் நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி மாணவர்களை மன அழுத்தத்தில் இருந்தும் தற்கொலை செய்யும் முயற்சிகளில் இருந்து மீட்டெடுத்து புது வாழ்வை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மக்கள் தொலைதூர மனநல ஆலோசனையை பெறும் நோக்கில் ‘நட்போடு மனநல சேவை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள D.M.S வளாகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இத்திட்டம் சுமார் ரூ.2 கோடியே 6 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு உள்ளது. மனநல ஆலோசனை பெற விரும்புபவர்கள் அரசின் 14416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பயன் பெறலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – அரசாணை வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இத்திட்டத்தில் மன நல ஆலோசனை மற்றும் அதற்கான தொடர் சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். தற்போது நட்போடு மனநல சேவை திட்டத்தில் 2 மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள் மற்றும் 20 ஆற்றுப்படுத்துனர்கள் மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் கூறினார்.