மாநிலம் முழுவதும் நாளை (நவ.10) பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
உத்திர பிரதேச மாநிலத்தில் ஆதித்யநாத் சத் பூஜையை முன்னிட்டு நாளை (10.11.2021) அம்மாநில முதல்வர் பொது விடுமுறையை அறிவித்துள்ளார். மேலும் முன்னேற்பாடு பணிகளை விரைந்து செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
பொது விடுமுறை:
இந்தியாவில் அரசின் முயற்சியாலும், தடுப்பூசிகள் பயன்பட்டாலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாக்கள் கொண்டாடவும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தால் பண்டிகை காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
3 முதல் 7ம் வகுப்புகளுக்கு மட்டும் நாளை (நவ.10) பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த 4ம் தேதி நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகை தினத்தை முன்னிட்டு விடுமுறைகளும் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் நாளை ஆதித்யநாத் சத் பூஜை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநில முதல்வர் நவம்பர் 10 ஆம் தேதி பொது விடுமுறையை அறிவித்துள்ளார்.
TNPSC 197 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க நவ.19 கடைசி நாள்!
ஆதித்யநாத் சத் பூஜை ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் இந்த பண்டிகை காலங்களில் உத்திர பிரதேச மாநிலத்தில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறும். இந்த பூஜையில் பங்கேற்க ஏராளமான மக்கள் ஒன்று சேருவர். அதனால் கூட்ட நெரிசல் நேரத்தில் மக்களுக்கு உதவும் வகையில் தூய்மை, பாதுகாப்பு, விளக்குகள், வாகன நிறுத்தம் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய ஏற்பாடுகளை அதிகரிகாரிகள் முறையாக செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.