3 முதல் 7ம் வகுப்புகளுக்கு மட்டும் நாளை (நவ.10) பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் தினசரி கொரோனா வழக்குகளின் நிலையை ஆய்வு செய்த பின்னர் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் 3 லிருந்து 7ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
தற்போதுள்ள கொரோனா நோய் தொற்று சூழலில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் அனைத்தும் அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க ஹிமாச்சலப் பிரதேசஅரசு அனுமதி கொடுத்துள்ளது.
TNPSC 197 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க நவ.19 கடைசி நாள்!
இது தொடர்பாக தலைமைச் செயலர் ராம் சுபக் சிங் வெளியிட்ட அறிவிப்பில் ‘மாநிலத்தில் செயலில் உள்ள கொரோனா வழக்குகளின் தற்போதைய நிலைமை மற்றும் நேர்மறை விகிதத்தை கருத்தில் கொண்டு, நவம்பர் 10ம் தேதி முதல் 3 லிருந்து 7ம் வகுப்புகளுக்கும், நவம்பர் 15 ஆம் தேதி முதல் 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா பொருத்தமான நடத்தை மற்றும் நெறிமுறைககளை பின்பற்றி கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.10) பள்ளிகள் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
அந்த வகையில் பேருந்து போக்குவரத்துகளை முழு திறனுடன் மீண்டும் தொடங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நேற்று (நவ.8) ஒரு நாளில் மட்டும் 145 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, ஐந்து இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இப்போது செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,123 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.