தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் விடுமுறை:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது . இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காட்சி அளித்து வருகிறது. மேலும் வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மேற்பார்வையிட்டு வருகிறார். அதனை தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உடனடியாக நீரை வெளியேற்றும் வகையில் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் நாளை (நவ.10) பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கனமழை குறித்து ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக முன்னதாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று பிற மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
TN TRB 2207 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!
தற்போது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.