TNPSC 197 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க நவ.19 கடைசி நாள்!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 197 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு நவ.19 கடைசி தேதி ஆகும்.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் அரசுத் தேர்வுகள் நடத்துவது குறித்து அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அதன் முடிவாக தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 197 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் நீண்ட நாட்களாக அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வந்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் நவ.11ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது தமிழக அரசுத்துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நிதித்துறையில், ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு பொருளியல், வணிக நிர்வாகம், பொருள் அளவியல், புள்ளியியல், கணிதம், சமூகப்பணி, சமூகவியல், மானுடவியல், பொது நிர்வாகம், வேளாண் பொருளியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.10) பள்ளிகள் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
அதனை தொடர்ந்து சுகாதாரத் துறையில், தடுப்பூசி கிடந்து காப்பாளர் பதவியில் 30 காலிப்பணியிடங்கள், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவியில் 161, புள்ளியியல் உதவியாளர் பதவியில் 2 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகைய இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு வரும் நவ.19ம் தேதியை கடைசி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறாக விண்ணப்பிப்பதற்கு இன்னும் குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ளதால் தேர்வர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.