செங்கல்பட்டில் ஜூன் 19ம் தேதி வரை மின்தடை – செயற்பொறியாளர் அறிவிப்பு!
செங்கல்பட்டு கோட்டத்தில் அவசர கால தொடர் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 16) முதல் வரும் 19-ம் தேதி வரை வெவ்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் பராமரிப்பு காரணமாக ஜூன் 16ம் தேதி இன்று வல்லாஞ்சேரி, கிழக்கு பொத்தேரி, விஜயலட்சுமி நகர், கலைவாணி நகர், கோவிந்தாபுரம், கோகுலபுரம், செங்குன்றம் ஒருபகுதி, மகாலட்சுமி நகர், நந்திவரம், பெருமாட்டு நல்லூர், மூலகழனி, நரியம்பாக்கம், மணிமங்கலம், வரதராஜபுரம், அழகூர், மாகாணயம், கொளத்தூர், மண்ணிவாக்கம், கே.கே. நகர், கரசங்கால், ஊத்துக்குழி, வேங்கடமங்கலம், கானத்தூர் ஒரு பகுதி, வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர், ஜே.ஜே. நகர், ஆகிய பகுதிகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் இருக்காது.
புதிய கல்வியாண்டு முதல் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு – முதல்வர் அறிவிப்பு!
மேலும் செட்டிநாடு ஸ்ரீநகர், திருப் போரூர் ஒரு பகுதி, பாரதி நகர், மேட்டுத்தண்டலம், படவேட்டம்மன் கோயில் தெரு, பாலாஜி நகர், கண்ணகப்பட்டு, திருப்போரூர்நான்கு மாடவீதிகள், கடும்பாடி,வடகடும்பாடி, பெருமாளேரி, அம்பாள் நகர், ஓட்டேரி, முள்ளிப்பாக்கம், புலிகுடிவனம், பாலூர், பூ இலுப்பை, ராயமங்கலம், எடர்குன்றம், மயிலை, ரேவதிபுரம், ராம்நகர், கோதாவரி நகர், மதுரை மீனாட்சிபுரம், திரு வடிசூலம், பங்காருபேட்டை, பொன்னியம்மன் நகர் போன்ற பகுதிகளிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை இன்று முதல் கட்டாயம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஜூன் 17ம் தேதி செங்கல்பட்டு நத்தம் பகுதி, பி.வி.களத்தூர், உதயம் பாக்கம், பள்ளியகரம், சாலவாக்கம் வீராபுரம், ஈகை, பெரிய காட்டுப்பாக்கம் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஜூன் 18ம் தேதி ,செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி, ராமபாளையம், அம்மணம்பாக்கம், அனுமந்தை, தேனூர், பட்டரவாக்கம், பூஞ்சேரி வெண்புருஷசம், கொக்கிலமேடு, வழுவதூர், மாம்பாக்கம், தத்தலூர் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
தமிழகத்தில் ஜூன் 30 வரை ரூ.2000 & மளிகை பொருட்கள் வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!
அதேபோல ஜூன் 19-ம் தேதி பாரேரி, அலமேலுமங்காபுரம், செங்குன்றம் பகுதி, ஆத்தூர், திம்மாவரம், பிலாப்பூர், காவூர், சிதன்டிமங்கலம், மையூர், சட்ராஸ், நாதன்மேடு, நெரும்பூர் போன்ற பகுதிகளில் அவசரகால தொடர் பராமரிப்புப் பணிகள் வரும் 19ம் தேதி வரை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.