தமிழகத்தில் ஜூன் 30 வரை ரூ.2000 & மளிகை பொருட்கள் வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வருகிற ஜூன் 30ம் தேதி வரை வழங்கப்படும். எனவே மக்கள் யாரும் அவசரப்பட வேண்டாம் என்றும் உணவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா நிவாரணம்:
தமிழக அரசு, ஊரடங்கு காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 (ரூ.2000+ரூ.2000) மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. இதை அடுத்து கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில் நேற்று (ஜூன் 15) முதல் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஜூன் 17 முதல் பேருந்து சேவைகள் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியதாவது, கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வரும் ஜூன் 30ம் தேதி வரை வழங்கப்படும். எனவே மக்கள் யாரும் அவசரமின்றி பொறுமையாக ரூ,2000 மற்றும் மளிகை பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். மேலும், கொரோனா காரணமாக நாள் ஒன்றுக்கு 75 முதல் 200 டோக்கன் தாரர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை? அரசு திட்டம்!
மேலும் மக்களுக்கு முறையாக கொரோனா நிவாரண நிதி மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு பகுதிகளிலும் தனி ஆய்வு குழு அமைக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார். இதற்கிடையில் தமிழகத்தில் வருகிற 21ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.