ஜூன் 17 முதல் பேருந்து சேவைகள் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு கேரளாவில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் நாளை (ஜூன் 17) முதல் குறிப்பிட்ட அளவில் பேருந்து சேவைகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கேரளாவில் கொரோனா பரவலை குறைக்க 40 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த பின்னர், வைரஸ் பரவலின் தீவிரத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் வியாழக்கிழமை (ஜூன் 17) முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை? அரசு திட்டம்!
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தொழில்துறை மற்றும் விவசாய பணிகள் அனுமதிக்கப்படும், மேலும் இந்த துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி அனுமதிக்கப்படும். வியாழக்கிழமை முதல் ஒரு குறிப்பிட்ட முறையில் பேருந்து பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும். திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் வங்கிகள் தொடர்ந்து செயல்படும். கூட்டங்கள் மற்றும் பொது விழாக்கள் அனுமதிக்கப்படாது என்றாலும், அதிகபட்சம் 20 பேர் வரை திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் – கள நிலவரம்!
மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கமிஷன்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் சுழற்சி அடிப்படையில் 25% ஊழியர்களுடன் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படலாம். உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மால்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அச்சகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் உள்ளிட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன.