தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை? அரசு திட்டம்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தினசரி குறைந்து கொண்டே வரும் நிலையில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகர பேருந்துகள் இயக்கத்தை வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேருந்து சேவை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தினசரி குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி 2 வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதன் பலனாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இருப்பினும் மே 10 முதல் பேருந்து சேவைகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 7 முதல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதே நடைமுறை ஜூன் 14க்கு பின்னரான ஊரடங்கிலும் பின்பற்றப்பட்டது. குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், சலூன் மற்றும் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது.
TN Job “FB Group” Join Now
ஆனால் அரசு பேருந்து போக்குவரத்திற்கு மட்டும் தடையை நீட்டித்து கொண்டே வந்தது. இதனால் சொந்தமாக வாகனம் இல்லாத பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே ஜூன் 21க்கு பின்னரான ஊரடங்கில் அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று முதல்வர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் பேருந்து சேவையை அனுமதிப்பது குறித்து பரிந்துரைகள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜூன் 21 முதல் இரவு ஊரடங்கு நேரம் குறைப்பு, கூடுதல் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைகளை தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதாவது மாவட்டங்களுக்குள் 50 சதவீத நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக போக்குவரத்துத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட அளவிலான பயணிகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.