தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை இன்று முதல் கட்டாயம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மத்திய அரசின் முடிவை அடுத்து ஜூன் 16 ஆம் தேதி முதல் தங்கம் வாங்குவதில் ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, நகை வர்த்தகர்கள் 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்தை ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்ய வேண்டும்.
தங்க நகைகள்:
ஜூன் 16 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தங்கம் வாங்குவதற்கு ஹால்மார்க்கிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் ஹால்மார்க்கிங் மையங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிர இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 கோடி தங்க நகைகைள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 30 வரை ரூ.2000 & மளிகை பொருட்கள் வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!
இந்த ஹால்மார்க்கிங் என்பது தங்கத்தின் தூய்மை தன்மையை குறிக்கிறது. முன்னதாக இந்த ஹால்மார்க்கிங் நடைமுறை இந்தியாவில் தன்னார்வமாக இருந்தது. இப்போது அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது தங்க நகை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ஹால்மார்க்கிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக 22 காரட், 18 காரட் மற்றும் 14 காரட் தங்க நகைகளுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அதாவது வாடிக்கையாளர்கள் மற்றும் தங்க வர்த்தகர் இருவரின் நலனுக்காக அதன் தரம் குறித்து விளக்குவது ஆகும்.
ஜூன் 17 முதல் பேருந்து சேவைகள் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் நகைகளுக்கான பதிவு, பணி மற்றும் ஹால்மார்க்கிங் (A & H) வழங்குவதை BIS ஹால்மார்க்கிங் திட்டம் அங்கீகரிக்கிறது. தொடர்ந்து நகையின் தரத்தை குறிக்கும் பணியில், தங்கத்தின் தரத்தை சோதனை செய்த பிறகு, ஹால்மார்க்கிங் முத்திரை A & H மையத்தில் ஒட்டப்படும். மேலும் பதிவு செய்யப்பட்ட நகைக்கடைக்காரர்கள் BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட A & H மையத்திற்கு, ஹால்மார்க்கிங் நகைகளை நன்கொடையாக வழங்கினால், ஹால்மார்க்கிங் பரிசோதனைக்கு பிறகு அவை விற்பனை செய்யப்படும்.