தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர்!
தமிழகத்தில் முதல் தவணை செலுத்திக் கொண்ட ஏராளமானோர் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளவில்லை. அவர்கள் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி பேருதவி புரிகிறது. கடந்த மே மாதம் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஆக இருந்த நிலையில் தற்போது தடுப்பூசிகள் பயன்பட்டால் தொற்று எண்ணிக்கை 1,500 ஆக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்த தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
TCS, Infosys & Wipro நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதம் அதிகரிப்பு – அறிக்கை தகவல்!
இந்த தடுப்பூசி முகாமல் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்க்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகங்கள் பரிசு பொருட்களையும் அறிவித்து வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வருகின்றனர். இந்த வாரம் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக் கிழமைக்கு பதில் சனிக்கிழமை (23.10.2021) நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (அக்.21) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அசைவ பிரியர்கள் மற்றும் மது பிரியர்களை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் டோஸ் செலுத்தி கொள்ள முன் வரவில்லை. இதனால் மீண்டும் தொற்று பரவும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் முதல் டோஸ் செலுத்தி கொண்டோர் இரண்டாம் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தற்போது தமிழகத்தில் 53.84 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.