தமிழகத்தில் இன்று (அக்.21) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று கல்லூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல பகுதிகளில் மின்தடை அறிவித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் மின்சாரத்துறை சார்ந்த விபத்துகள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மின்கம்பிகளில் சரியான பராமரிப்பு இல்லாததன் விளைவாக ஏற்படும் பழுதுகளினால் விளைகின்றது. மின்விபத்துகளை பொறுத்தவரை மழைக்காலங்களில் அதிக அளவில் நிகழும். ஏனென்றால் மழைக்காலங்களில் கம்பிகள் நனைந்து அதில் பூஞ்சைகள் உருவாகும். பின்னர் அந்த மின்கம்பியில் பழுது ஏற்படும். அதனை தொடர்ந்து விபத்து ஏற்பட அதிக அளவில் வாய்ப்புகள் இருக்கும். பின்னர் அடிக்கடி மின்தடை ஏற்படும். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சிரமப்படுவார்கள். அவ்வாறு ஏற்படும் மின்விபத்துகளை தடுக்க மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 25% வரை அகவிலைப்படி (DA) உயர்வு – வெளியான தகவல்!
இத்தகைய உத்தரவானது கடந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது திமுக ஆட்சியிலும் இந்த நடைமுறை தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின் படி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னறிவிப்புடன் தற்போது மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மேலக்கல்லூர் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’!
இதனால் கல்லூர் சுற்றுவட்டாரங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு போன்ற பகுதிகளின் சுற்றுவட்டாரங்களில் மின்விநியோகம் இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.