தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’!

0
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்'!
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்'!
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’!

தமிழகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு காமராஜர் போர்ட் லிமிடெட் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்த உள்ளன.

போட்டிகள்:

தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 9 – 12 வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 1 -8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து கல்லூரி, பள்ளி மாணவ & மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு காமராஜர் போர்ட் லிமிடெட் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்த உள்ளனர்.

சர்வதேச விமான பயணிகளின் கவனத்திற்கு – இந்திய அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ‘ஊழல் இல்லாத இந்தியா’ எனும் தலைப்பில், 24X27 செ.மீ., அளவில் வெள்ளைத்தாளில் ஓவியம் வரைய வேண்டும். 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் ‘புதிய இந்தியாவை உருவாக்கு – ஊழலை ஒழித்தல்’ என்ற தலைப்பில் 500 முதல் 600 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை சொந்த சொந்த நடையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓவியத்தை சர்குலேஷன் பிரிவு, இந்து தமிழ் திசை, 124 – வாலாஜா சாலை, சென்னை – 2 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கட்டுரையை அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!