தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்டோபர் 22ம் தேதியான நாளை காங்கயம் மின்வாரிய கூட்டத்திற்கு உள்பட்ட துணைமின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாவட்டத்தின் பகுதி வாரியாக மின்தடை செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், காங்கயம் மின்வாரிய கூட்டத்திற்கு உள்பட்ட ராசத்தாவலசு, வெள்ளக்கோயில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
சர்வதேச விமான பயணிகளின் கவனத்திற்கு – இந்திய அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இதனால் அக்டோபர் 22ம் தேதியான (நாளை) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தமிநாடு மின்வாரிய காங்கயம் செயற்ப்பொறியாளர் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மின் பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசத்தாவலசு துணைமின் நிலையம்:
மேட்டுப்பாளையம், ராசத்தாவலசு, வெள்ளக்கோயில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளிப்பட்டி.
வெள்ளக்கோயில் துணைமின் நிலையம்:
வெள்ளக்கோயில், நடேசன் நகர், ராஜீவ் நகர், கொங்கு நகர், டி .ஆர்.நகர், பாப்பம்பாளையம், குமரவலசு, எல்.கே. சி. நகர், கே.பி.சி.நகர், சேரன் நகர், காமராஜபுரம்.
தமிழகத்தில் ஆங்கில வழி பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ்வழி வகுப்புகள் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
தாசவநாயக்கன்பட்டி துணைமின் நிலையம்:
தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காலிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சுவலசு, குமாரபாளையம், சாலைப்புதூர், முலையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சேர்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்:
அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்களப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரகாளிபாளையம், மேட்டுபாளையம்.