தமிழகத்தில் ஆங்கில வழி பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ்வழி வகுப்புகள் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் வழி வகுப்பு
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் – நாளை முதல் விநியோகம்!
அதில், இனி வரும் காலங்களில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கேட்கும் பள்ளிகள், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளனவா என பரிசீலித்த பின்னர் அனுமதி அளிக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலவழி பிரிவு துவங்க அனுமதி கேட்கும் பள்ளிகளில் குறைந்தபட்சம், 50 சதவீதம் பிரிவுகள், தமிழ் வழியாக இருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறப்பு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!
இந்த நிபந்தனையை ஏற்கும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஒரு பள்ளியில் நான்கு பிரிவுகள் இருந்தால், இரண்டு பிரிவுகள் தமிழ் வழியாகவும், இரண்டு பிரிவுகள் ஆங்கில வழியாகவும் செயல்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மூன்று பிரிவுகள் இருந்தால் அதில் இரண்டு தமிழ் வழி பிரிவு இருக்க வேண்டும் என்றும் ஒரு பிரிவு மட்டும் இருந்தால் அது தமிழ் வழியாகவே செயல்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.