தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறப்பு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது அது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் பதில்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோயில்கள், திரையரங்குகள், உணவகங்கள், மற்றும் பிற கடைகள் என அனைத்திற்கும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் பார்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து ஒவ்வொரு மாதமும் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான அந்த கூட்டம் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – அரசுக்கு நிர்வாகங்கள் கோரிக்கை!
அந்த கூட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திருச்சி, சேலம், மதுரை, சென்னை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களை சேர்ந்த முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட பொது மேலாளர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கடந்த மாத கூட்டத்தில் கடைகள் மூட வேண்டும் என்று பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் 84 கடைகள் இடமாற்றம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்த 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 1599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டன அவற்றில் 933 பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதனை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கு 38 மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறினார். அந்த குழுவில் அமைச்சரும் இடம்பெற உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளார். பின்னர் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள டாஸ்மாக் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் அவர்கள் ஆலோசித்து முடிவு வெளியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.