சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் அக்டோபர் 21ம் தேதியான இன்று காலை சந்தை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை மற்றும் மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுப முகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – அரசுக்கு நிர்வாகங்கள் கோரிக்கை!
இந்த மாதத்தில் அதிக பண்டிகைகள் மற்றும் அடுத்த மாதத்தில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் கடந்த நாட்களில் தினசரி தங்கத்தின் விலை அதிக ஏற்ற, இறக்கங்களுடன் உள்ளது. நேற்றைய மாலை நேர நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,752 ஆக விற்பனை செய்யப்பட்டது.
மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!
அக்டோபர் 21ம் தேதியான இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ. 35,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.4,484-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.