TCS, Infosys & Wipro நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதம் அதிகரிப்பு – அறிக்கை தகவல்!
கடந்த சில காலமாக இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அதிகபட்ச குறைப்பு விகிதத்தை கண்டு வருவதால் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வை வழங்கி அதனை சரி செய்ய முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அட்ரிஷன் விகிதம்
இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்ப துறைகளுக்கான ஆர்வம் இளைஞர்களிடம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. அதற்கு வேலை வாய்ப்பு மற்றும் பெருமளவு ஊதியம் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா கால கட்டத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்து வருவதால் இந்தியாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று (அக்.21) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இருந்தாலும் இவ்வகை IT துறைகளில் அட்ரிஷன் அதாவது பணிக்குறைப்பு விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த வேலை இழப்பு விகிதம் என்பது IT துறையில் காலகாலமாக தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போக்கு தொழில்நுட்ப துறையில் உள்ள பல நிர்வாகங்களை வருத்தமடைய செய்துள்ளது. ஒரு பக்கத்தில் IT சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், IT நிறுவனங்களின் அட்ரிஷன் வீதமும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இன்போசிஸ், விப்ரோ மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகிய முன்னணி IT நிறுவனங்கள் இந்த ஆண்டு அதிக அளவு குறைப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளதாக அறிக்கை தகவல்கள் கூறுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாத காலாண்டில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் இரண்டாவது பெரிய IT நிறுவனமான இன்போசிஸ் 20.1% குறைப்பு விகிதத்தையும், விப்ரோ 20.5% மற்றும் TCS 11.9%பதிவு செய்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 25% வரை அகவிலைப்படி (DA) உயர்வு – வெளியான தகவல்!
சமீபத்தில், இரண்டாம் காலாண்டு வருவாய் செய்தியாளர் சந்திப்பின் போது அதிக தொழில் வளர்ச்சி மற்றும் விநியோக நெருக்கடியின் பின்னணியில் அட்ரிஷன் அதிகரித்திருப்பதை இன்போசிஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த பாதிப்புகளை தவிர்க்க இந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக தனது ஊழியர்களுக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வு விகிதத்தையும் இந்நிறுவனம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் மட்டும் ஓரிரு முறை சம்பள உயர்வுகளையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.