TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கிடையாது – நிதியமைச்சர் அறிவிப்பு!

0
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கிடையாது - நிதியமைச்சர் அறிவிப்பு!
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கிடையாது - நிதியமைச்சர் அறிவிப்பு!
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கிடையாது – நிதியமைச்சர் அறிவிப்பு!

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வேறு வகையில் சரி செய்ய முடியுமா என்று தேர்வு ஆணையத்தில் ஆலோசித்து அடுத்த தேர்வுக்கு முன்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2A தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இதில்,குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இன்று அதிகமானோர் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதை அடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் OTR கணக்கு வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நிரந்தர பதிவுடன் ஆதார் விவரங்களை இணைத்திருக்க வேண்டும் என தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது. இதை அடுத்து குரூப் 2, குரூப் 2A தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு இன்றுடன் OTR – ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இந்த விவாதத்தில் அதிமுக துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், OTR – ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என குறிப்பிட்டு உள்ளார். எனவே குரூப் 2 தேர்வுக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார். இந்த கோரிக்கைக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2020ம் ஆண்டு ஒரே விண்ணப்பதாரர் 2 முறை விண்ணப்பிக்க கூடாது என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதனால் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!