காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது – போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!!
பெங்களூரில் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சாலைகளில் பள்ளி பேருந்துகள் காலை நேரத்தில் மாணவர்களை இறக்கி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
பெங்களூரில் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சாலைகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏனெனில் பள்ளி பேருந்துகள் அல்லது வேன்கள் சாலைகளில் நின்று கொண்டு மாணவர்களை இறக்கி விடுகின்றனர். இதனால் அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் போக்குவரத்து நெரிசலால் பாதிப்படைகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விடுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. இதே போன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் – 67 வயதுள்ள நபருக்கு பாதிப்பு உறுதி! தடுப்பு பணிகள் தீவிரம்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த அறிவிப்பில், காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சாலைகளில் நிறுத்த அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி பேருந்துகள் மாணவர்களை காலை 8.15 மணிக்குள் இறக்கி விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் அலுவலகத்திற்கு செல்வோர் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்வார்கள்.