இனி ‘இவர்களுக்கு’ ரேஷன் பொருட்கள் கிடையாது – அரசு அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் ரேஷன் திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் திட்டம்:
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்குவதற்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது ரேஷன் கடைகளில் பல ஊழல்கள் நடைபெறுவதாக புகார்கள் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊழலை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு சரியாக வழங்கப்படாமல் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 23ல் ‘இந்த’ பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!
இந்தியாவில் ரேஷன் திட்டம் ஏழை மக்களுக்கு என்று தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். ஆனால் தற்போது வசதி படைத்தவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முறையாக உணவு பொருட்கள் கிடைப்பதில்லை என்று தகவல் வெளியாகிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் வறுமை கோட்டின் தரத்தை மாற்ற போவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் இருந்து பலரும் வெளியேறும் நிலை ஏற்படக்கூடும்.
இதன் மூலம் ரேஷன் கடைகளில் மோசடி வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறுமை தொடர்பான பட்டியல் மாற்றம் செய்யப்பட்ட பிறகு அரசின் பல திட்டங்களின் பலன்கள் நிறைய பேருக்கு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. அரசு புதிய தரநிலைகளை அமல்படுத்திய பின் தகுதியான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்