தமிழகத்தில் ஆகஸ்ட் 23ல் ‘இந்த’ பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 23ல் 'இந்த' பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் ஆகஸ்ட் 23ல் 'இந்த' பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் ஆகஸ்ட் 23ல் ‘இந்த’ பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!

திருநெல்வேலி மாவட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியின் போது பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு இன்று மின்தடை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கவர்னர் வருகையை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்பு பணிகளை முன்னிட்டு ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான் குளம், ஈசுவரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம் தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, அன்பு நகர், மகிழ்ச்சி புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 23ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் காசநோய் தடுப்பூசி? அமைச்சர் விளக்கம்!

Exams Daily Mobile App Download

அதே போல நகர், திருநகர், திருமால் நகர், பொறியியல் கல்லூரி பகுதி,இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம் மேல குளம், நடுவக்குறிச்சி, ரகுமத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம், சமாதானபுரம், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைக்கொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்பு நகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!