அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலர்பொடி தூவி கலந்து கொள்ளும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல வகையான பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பெயர் பெற்றதாகும்.
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? BCCI தீவிர ஆலோசனை! விரைவில் அறிவிப்பு!
இப்போது இந்த ஆண்டும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சில முக்கிய பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகையுடன் துவங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பலத்த கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஜன.25ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் – பிரதமர் உத்தரவு!
இம்முறை இரட்டை டோஸ் தடுப்பூடி செலுத்திய நபர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கவும், பார்வையிடவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலர்பொடி தூவி வரும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசும் போது, ‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலர்பொடி தூவி களமிறக்கப்படும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.