தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை இல்லை? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தமிழகம் பாதுகாப்பாகவே இருக்கிறது என்று மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை நோய்:
தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு துவங்கி இருக்கும் நிலையில், முகக்கவசம், சானிடைசர் பயன்பாட்டை அதிகரிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் வெளிவந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் இந்த தகவல் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் இறங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதிய தொழில் தொடங்க திட்டமிடும் கதிர் & முல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து வருபவை!
இதன் அடிப்படையில் தமிழகத்தின் சென்னை, கோவை ,மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் குரங்கம்மை பரவலால் பாதிக்கப்பட்ட 63 நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணித்து வருகிறது. மேலும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களுக்கு காணொலி வாயிலாக பேட்டி அளித்த கேப்ரியாசஸ், ‘‘குரங்கு அம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது’ என்று அறிவித்தார்.இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கம்மை தொற்று இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் கூறியது, “ பன்னாட்டு விமான நிலையங்களில் அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு முகத்திலோ , முழங்கை கீழ் கொப்புளங்கள் உள்ளதா? என ஒவ்வொருவரையும் விமான நிலையங்களில் கண்காணிக்க அறிவுறுத்தி வருகிறோம். தற்போது குரங்கம்மையின் பாதிப்பு 63 நாடுகளில் கடந்திருக்கிறது.தமிழகத்துக்கும், கேரளாவுக்கு இடையே உள்ள 13 எல்லைப் புறங்களிலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்று வரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.