தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இனி கிடையாது – மாணவர் சேர்க்கை குறைவு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட வகுப்புகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை ரத்து செய்வதாக அரசு தெரிவித்துள்ளது. அதனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கோடை விடுமுறை முடிவதற்குள் ஆசிரியர்கள் பேரணி நடத்த உள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கடந்த ஆட்சியில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த வகுப்புகளுக்கு தொடக்கக் கல்வித்துறையில் இருந்து ஆசிரியர்கள் பலர் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இது பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் மூலமாக அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
Exams Daily Mobile App Download
மேலும் தமிழகத்தில் மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளிகள் மீட்டெடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் இதிலிருந்து எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ரத்து செய்யப்பட உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக மீண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.