IND vs SA தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
ஓமைக்ரான் தொற்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதன் காரணமாய் தென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் IND vs SA கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ரசிகர்களுக்கு அனுமதி இல்லை:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா vs தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இம்மாதம் தொடங்கும் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியில் முடிவடைகிறது. இப்போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு மைதானத்திற்குள் வந்து போட்டியை கண்டுகளிக்க 2000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.65 லட்சம் ஊதியத்தில் BMRCL வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மறுபுறம் ஓமைக்ரான் தொற்று காரணமாய் தென் ஆப்பிரிக்கா நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வரும் ரசிகர்கள் மூலம் தொற்று பரவ கூடாது என்பதற்காக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு மைதானம் அதிகமான டிக்கெட்களை விற்பனை செய்யவில்லை. இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியை சில பிரதிநிதிகள் வந்து பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் 2021 இல் அதிகமாக Google Search பண்ணது இத பத்தி தான் – ஷாக்கிங் ரிப்போர்ட்!
அடுத்த வாரம் கோவிட்-19 தொடர்பான அரசாங்க விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பார்க்க கிரிக்கெட் மைதான அமைப்பாளர்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று இதுவரை அரசு அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.