8 ஆம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
கிராம உதவியாளர் – 3 பணியிடங்கள்
கிராம உதவியாளர் கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடத்திற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்த பட்ச வயது வரம்பு 01.01.2022 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்ச வயது வரம்பானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும்) சீர்மரபினர் பிரிவினருக்கு 32 வயது ஆகும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு குன்னூர் வட்டத்தினை சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன் எதிர்வரும் 15.04.2022 மாலை 5.00 மாணிக்குள் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கிடைக்கும்படி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.