இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி – அறிக்கை வெளியீடு!
நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை உள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, நாட்டில் இரவு ஊரடங்கை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு நீக்கம்:
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஓமைக்ரான் தொற்று தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. மேலும் தடுப்பூசி போடப்பட்டவர்களையும் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும் கூட பாதிக்கிறது. ஓமைக்ரான் முதன்முதலில் தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் நவம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. இது டிசம்பர் நடுப்பகுதியில் சுமார் 26,000 தினசரி நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 91,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் 13,000க்கும் குறைவான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
Post Office வங்கியில் வரப்போகும் மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
பல ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகள் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. தென்னாப்பிரிக்கா புத்தாண்டு ஈவ் கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே தடை விதிக்கப்படாது என்று அறிவித்தது. நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. இதனால் ஜனாதிபதி சிரில் ரமபோசா நாட்டில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும். எனவே மக்கள் நடமாடும் நேரங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது அறிக்கையில் தெரிவித்துள்ளார். உரிமம் பெற்ற இடங்களில் இரவு 11 மணிக்குப் பிறகு மது விற்பனை அனுமதிக்கப்படும்.
PG TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வு தேதி அறிவிப்பு!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் பொது கூட்டங்களில் 1,000 பேர் வீட்டிற்குள்ளும் 2,000 பேர் வெளியிலும் மட்டுமே இருக்க வேண்டும். இருப்பினும், அரசு தொடர்ந்து எச்சரிக்கை மற்றும் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. ஜனாதிபதி அறிக்கையின் படி முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் நோய்த்தொற்றுகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.