சென்னையில் போக்குவரத்து நெரிசல் – கனமழை எதிரொலி!
சென்னையில் தொடர்ந்து அதி கனமழை பெய்துள்ளது. அதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அவ்வாறு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்தில் சிக்கல்:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அவ்வாறு தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த வடகிழக்கு பருவமழையானது நடப்பு மாதமான டிசம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர் குறையத் தொடங்கியது. ஆனாலும் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி – அறிக்கை வெளியீடு!
இதற்கிடையில் பனிக்காலம் தொடங்கியதால் சென்னை வானிலை ஆய்வு மையம் இனிமேல் மழை பொழிவுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பனி பொழிவும் குறைவாகவே இருந்தது. அதனால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி நேற்று சென்னையில் நண்பகல் முதல் இரவு 10 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழை மேக வெடிப்பு காரணமாக பொழிந்தது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
Post Office வங்கியில் வரப்போகும் மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
நேற்று பெய்த கனமழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பொழிந்துள்ளதாகவும், மேக வெடிப்பு காரணமாக பெய்யும் மழை நீண்ட நேரம் பெய்யாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாள் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.