Post Office வங்கியில் வரப்போகும் மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்திய தபால் துறை சார்பாக இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் புத்தாண்டு முதல் சில மாற்றங்களை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
புதிய மாற்றங்கள் அமல்
இந்தியாவில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளை ஒவ்வொரு துறையிலும் அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக வங்கிகளில் பல்வேறு விதிமுறைகளை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய தபால் துறை சார்பாக இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் நாளை முதல் சில பணம் சார்ந்த விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்புகளை வெளியாகியுள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணம் எடுப்பதற்கும் போடுவதற்கும் கட்டணங்கள் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
PG TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வு தேதி அறிவிப்பு!
இந்த வங்கியில் மூன்று வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளது. இதில் அடிப்படை சேமிப்பு கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் நான்கு முறை இலவசமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு பிறகு பணம் எடுப்பதற்கு குறைந்தபட்ச கட்டண தொகையாக ரூ.25 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதையடுத்து சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் ஒரு மாதத்துக்கு ரூ.10000 டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த உச்ச வரம்பை மீறும் போது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டண தொகை வசூலிக்கப்படும்.
PAN கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அத்துடன் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்பு கணக்கிலிருந்து ரூ.25000 தொகையை எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் இந்த வரம்பை மீறும் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச வரம்பிற்கு பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் ரூ.25 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படை சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறைகளை அறிந்து இருக்க வேண்டும். அத்துடன் இந்த அனைத்து மாற்றங்களும் நாளை முதல் இந்த வங்கியில் அமலாக உள்ளது.