PG TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வு தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதிவியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான தேர்வு நடைபெறவுள்ள தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு தேதி அறிவிப்பு:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிகளுக்கு ஏற்பட்டுள்ள 2,207 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடபட்டது. அந்த வகையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை – 1, கணினி பயிற்றுனர் நிலை – 1 ஆகிய பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலிப்பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க கடந்த அக்டோபர் மதம் தொடங்கப்பட்டது.
PAN கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் தொடக்கத்தில் இருந்தே சில சிக்கல்கள் நிலவியது. முதலில் வயது வரம்பு தளர்வு வழங்கியதன் அடிப்படையில் சிக்கல் நிலவியது. பின்னர் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து சிக்கல் நிலவியது. அவ்வாறு எழுந்த பல்வேறு சிக்கல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தேதி தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றலாம் என்று கால அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலைகள் – பணிகள் தீவிரம்!
அப்போது கணினி வழி தேர்வு நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்வு எப்போது நடைபெறும் என்று விண்ணப்பதாரர்கள் தேர்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். தற்போது வரும் ஜன.29ம் தேதி முதல் பிப்.6ம் தேதி வரை இரண்டு வேளைகளிலும் கணினி வழியில் தேர்வுகள் நடத்தும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேதியில் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்கள் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் இதற்கான விரிவான அட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.