மாநிலம் முழுவதும் மீண்டும் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு – கட்டுப்பாடுகள் தீவிரம்!
தேசிய தலைநகர் டெல்லியில் இன்று (பிப்.10) முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதால் வாகன தடுப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா 3ம் அலைத்தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததால் டெல்லி அரசு, கடந்த வாரம் முதல் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 7ம் தேதி முதல் டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிற்சி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்களும் வழக்கம் போல செயல்பட துவங்கி இருக்கிறது.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!
மேலும் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் பிப்ரவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அலுவலகங்கள் 100 சதவீத திறனுடன் வேலை செய்யலாம் என்றும் கார் ஓட்டுபவர்கள் மட்டும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் டெல்லியில் இப்போது இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மட்டும் ஒரு மணி நேரம் தளர்த்தப்பட்டு இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அந்த வகையில் இன்று அதாவது பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு உத்தரவு தொடங்குவதால் டெல்லியில் தடுப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி, டெல்லியில் சாலைகளில் பயணிக்கும் நபர்களின் வாகனங்கள் மற்றும் அடையாள அட்டைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தவும் டெல்லி அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.