தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளி விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் 3ம் அலையின் தாக்கம் வேகமாக பரவ தொடங்கியது.

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – மத்திய அரசு பெருமிதம்!

அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளை மீண்டும் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – பொதுத்தமிழ் தமிழ் பாடக்குறிப்புகள்

இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதனால் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடிகளை அமைக்கும் பணிகள் நடைபெறும். இந்த பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அத்துடன் 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதனால் பள்ளிகளுக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து 23ம் தேதி அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!