ஜனவரி 1 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பஞ்சாப் மாநில அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளை ஜனவரி 1, 2021 முதல் நீக்க முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பின்னர் தொற்று எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து பலவேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இதனால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தன. இருப்பினும் பஞ்சாப் மாநில அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வந்தது. தற்போது ஜனவரி 1ம் தேதி முதல் அதனை ரத்து செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், அனைத்து நகரங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. ஆனால் உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை டிசம்பர் 31 வரை இரவு 9:30 மணிக்குள் மூடுவது கட்டாயமாகும். மேலும், சமூகக் கூட்டங்களில் 200 முதல் 500 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சகம்!!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் புதிய 2வது அலை மற்றும் உருமாறிய தொற்று குறித்த அச்சத்தின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் இதுவரை 1,66,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியின் விநியோகம் தொடர்பான முன்னோட்டம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்