வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சகம்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் அது மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிக்கணக்கு:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் பலரும் வேலை இழந்தனர். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, வழக்கமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஆண்டுதோறும் ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்படும். ஆனால் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இம்முறை டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!!
தற்போது அந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதாவது தனி நபர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜனவரி 10 வரையும், வணிக நிறுவனங்களுக்கு பிப்ரவரி 15ம் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த தேதிக்குள் சமர்பிப்பவர்களுக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!
அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சகம் கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்