மாநிலத்தில் மார்ச் 17 முதல் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், “ஹோலிகா தஹன்” நிகழ்ச்சிக்காக ஹோலிக்கு முந்தைய நாளான மார்ச் 17 அன்று இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்:
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டது. பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் “ஹோலிகா தஹன்” நிகழ்ச்சிக்காக ஹோலிக்கு முந்தைய நாளான மார்ச் 17 அன்று மாநிலத்திற்கு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
ஆதார் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
அதாவது ஹோலி பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் மற்றும் வாகனங்கள் செல்வது தொடர்பான கட்டுப்பாடுகள் மார்ச் 17 இரவு தளர்த்தப்படும். இதன் காரணமாக மக்கள் “ஹோலிகா தஹான்’’ பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை கடந்த புதன்கிழமை நிலவரப்படி 20,16,094 ஆக அதிகரித்தது.
அலுவலக பணியாளர்களுக்கு குட் நியூஸ் – தொடரும் WFH முறை? புதிய விதிகளை உருவாக்க திட்டம்!
தற்போது மாநிலத்தில் நோய் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,182 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது மாநிலத்தில் 1,560 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் உட்பட இதுவரையிலும் 19,93,352 நபர்கள் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநில நிர்வாகம் இதுவரையிலும் கொரோனாவுக்கு 2.44 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.