ஆதார் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அனைத்து வேலைகளுக்கும் அவசியமாக உள்ளது. இந்த ஆதார் எதிர்பாராத விதமாக தொலைய நேரிட்டால் அதை மீண்டும் எளிதாக பெறலாம். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
ஆதார் கார்டு:
இந்தியாவில் ஆதார் கார்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபரின் வேலைகளுக்கும் அரசு வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்து விட்டது. இந்த நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும். அதனால் UIDAI அமைப்பு ஆதாரில் தேவையான விவரங்களை வழங்குகிறது. அதன் படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அஞ்சலகம் மற்றும் ஆதார் மையத்தில் விவரங்களை மாற்றலாம்.
அலுவலக பணியாளர்களுக்கு குட் நியூஸ் – தொடரும் WFH முறை? புதிய விதிகளை உருவாக்க திட்டம்!
தற்போது ஆதார் அனைத்து இடங்களிலும் தேவைப்படுவதால் அதை எப்போதும் கைகளில் வைத்திருப்பது அவசியம். இத்தகைய சூழ்நிலைகளில் நாம் எதிர்பாராத விதமாக நமது ஆதாரை தொலைக்க நேரிடும். இந்த நேரத்தில் நாம் பயப்பட தேவையில்லை. தற்போது எளிதாக வீட்டில் இருந்தபடியே புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். UIDAI யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நேரடியாக புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து அதை டவுன்லோட் செய்யலாம். கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
- முதலில் UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
- அதில் வரும் பக்கத்தில் டவுன்லோட் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு பிறகு செக்யூரிட்டி கோட்டை உள்ளிடவும்.
- அடுத்ததாக உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒடிபி அனுப்பவும். அந்த ஒடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
- இறுதியாக ஆதார் அட்டை பிடிஎஃப் வடிவில் டவுன்லோட் ஆகும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்