செப்.30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – கொரோனா 3ம் அலை எதிரொலி!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச அரசு, கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக அம்மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த முதல்வர், தடுப்பூசி செலுத்துவது, சுகாதார மையங்கள், மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில், அரசு மருத்துவமனை நிர்வாகமான ஆரோக்யஸ்ரீ திட்டத்திற்கு அதிக படுக்கைகளை ஒதுக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? இன்று அறிக்கை தாக்கல்!
மேலும் சுகாதார மையங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், உடல் உறுப்பு மாற்று வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதற்கு மத்தியில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக அம்மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 16 முதல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகளின் பராமரிப்புக்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Apple iPhone 13 சீரிஸ் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியீடு – செப்.17 முதல் முன்பதிவு துவக்கம்!
இதனுடன் மருத்துவமனைகளில் படுக்கை மேலாண்மை, குளியலறை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உணவு தரம் மற்றும் வரவேற்பு சேவைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை சிகிச்சைக்காக 20,964 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 27, 311 D வகை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆம்புலன்ஸ் சேவைகளில் ஆக்ஸிஜன் பைப்லைன் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.