தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? இன்று அறிக்கை தாக்கல்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? இன்று அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? இன்று அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? இன்று அறிக்கை தாக்கல்!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் முதல்வர் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வழியாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் ஆன்லைன் வழிக்கல்வியில் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பலர் படிப்பினை கைவிட்டு பணிக்கு சென்று விட்டதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு விரைந்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரப்பட்டது. மறுபுறம் கொரோனா பரவலும் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

செப்.17 முதல் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!

எனவே அரசு பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. சில மாநிலங்களில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

JEE Mains 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு – NTA அறிவிப்பு!

மாநில அளவில் நேரடி வருகை பதிவில் கன்னியாகுமரி (87%) முதல் இடத்திலும், கோவை (67%) கடைசி இடத்திலும் உள்ளது. மேலும் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அடுத்தகட்டமாக தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துகள் பெறப்பட்டது. மேலும் 6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த வாரம் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. முதல்வர் இதனை ஆராய்ந்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவினை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!