2 மணிநேரம் தளர்வுகளுடன் மீண்டும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னதாக அரசு அமல் படுத்தியிருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நேரத்தில் கூடுதலாக 2 மணி நேர தளர்வுகளை அறிவித்துள்ளது. இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3ம் அலை மற்றும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வகை பரவல் காரணமாக மீண்டும் அவசர நிலை கடைபிடிக்கப்பட்டது. முதல் மற்றும் 2ம் அலை நோய் தொற்றின் தாக்கத்தின் போது இருந்ததை விட இந்த முறை அதிக பாதிப்புகள் குறைவான காலத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இறப்பு விகிதம் குறைவாக பதிவாகியது. மேலும், குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டது.
IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ், சூடுபிடிக்கும் ஏலம் – ஒரு சிறப்பு தொகுப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னதாக அதிக கொரோனா தொற்று பரவல் காரணமாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி முன்னதாக அங்கு இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருந்தது. தற்போது அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5மணி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஹோட்டல்கள், உணவகங்கள், தாபாக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள் மற்றும் ஆடிட்டோரியங்கள் 50% திறனில் செயல்பட அனுமதிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 8ம் தேதி வரை பள்ளிகள் மூடல் – அரசு உத்தரவு!
இதே போல், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளை அவை நடைபெறும் இடத்தின் திறனில் 50% இல் ஏற்பாடு செய்யலாம். இருப்பினும், நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் பிப்ரவரி 11 வரை மூடப்பட்டிருக்கும். மேலும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வரும் பிற மாநில மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என்றும், RT-PCR சோதனையின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.