மாநிலம் முழுவதும் பிப்ரவரி 8ம் தேதி வரை பள்ளிகள் மூடல் – அரசு உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 8 வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
பள்ளிகள் மூடல்
மாநிலம் முழுவதும் கொரோனா நேர்மறை விகிதம் மற்றும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடும் நடவடிக்கையை பிப்ரவரி 8 வரை பஞ்சாப் அரசு நீட்டித்துள்ளது. என்றாலும் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆதரவாக கருத்துக்கள் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்போது பஞ்சாப் மாநில அரசாங்கத்தின் முடிவுக்கு பதிலளித்து, தனியார் பள்ளி சங்கத் தலைவர் தாக்கூர் ஆனந்த், ‘தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலிலும் கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை மூடும்படிக்கு அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளை மீண்டும் திறக்கக்கூடாது என்ற முடிவு நியாயமற்றது. பள்ளிகள் எவ்வளவு காலம் மூடப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக பஞ்சாபின் கல்வி முறை வீழ்ச்சியடையும்’ என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
இதனுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், பிப்ரவரி 7ம் தேதி ஜிடி சாலையில் விவசாயிகள் சங்க ஆதரவுடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் துரி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு அரசியல் பேரணிகளுக்கு அனுமதி அளித்துள்ள அரசாங்கம், அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை 1,000 பேருடன் நடத்த கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இப்போது பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை கட்டுப்படுத்தியுள்ள பஞ்சாப் மாநிலத்தில், ஒன்பது முதல் 12ம் வகுப்புகளுக்கு ஆப்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதுள்ள கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.