IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ், சூடுபிடிக்கும் ஏலம் – ஒரு சிறப்பு தொகுப்பு!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளுக்காக பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் நேற்று அறிவித்தார். இதில் 1214 வீரர்கள் பதிவு செய்த நிலையில் இறுதி பட்டியலில் 590 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
IPL மெகா ஏலம்:
ஐபிஎல் தொடர் இளம் வீரர்கள் மற்றும் திறமைவாய்ந்த கிரிக்கெட்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு போட்டியாகும் . 2008 ஆம் தொடங்கிய IPL தொடர் கடந்த ஆண்டு வரை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துபாயில் நடைபெற்ற 14 வது சீஸனும் சிறப்பாக முடிவடைந்தது. இத்தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது . இதை தொடர்ந்து IPL தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. ஐபிஎல் 2022 ஏலம் இந்த மாதம் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள்.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 8ம் தேதி வரை பள்ளிகள் மூடல் – அரசு உத்தரவு!
இந்நிலையில் நேற்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் இறுதிப் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது இந்த ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் எந்த அணி எந்த வீரரை எடுக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஏலத்தில் 1214 வீரர்கள் பதிவு செய்த நிலையில் இறுதி பட்டியலில் 590 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கையில் , ஸ்டோக்ஸ் போன்ற IPL நட்சத்திரங்கள் இல்லாத காரணத்தினால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பிப்ரவரி 14 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் ஏலத்தில் பதிவு செய்த 590 வீரர்களில், 228 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே இடம்பெற்ற வீரர்கள் என்றும் 355 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெறாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள் என்றும் BCCI தெரிவித்துள்ளது. மீதம் உள்ள 7 வீரர்கள் அசோசியேட் நேஷன்ஸைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் 48 வீரர்கள் தங்களது பெயரை மெகா ஏலத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 1.5 கோடி தொகைக்கு 20 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இம்முறை ஏலத்தில் 10 அணிகளும் வீரர்களை எடுக்க அதிக நேரம் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.