மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – நகர நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
மத்திய பிரதேச மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கார்கோன் நகரில் மட்டும் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு தொடரும் என உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
முழு ஊரடங்கு
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி அன்று உத்திரபிரதேச மாநிலத்தின் கார்கோன் நகரில் வகுப்புவாத மோதல்கள் வெடித்த நிலையில், கடைகள், பொருட்கள் உட்பட வீடுகள் பலவும் சேதமடைந்தன. மேலும் கார்கோன் வன்முறையின் போது போலீஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அந்நகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 10ம் தேதி துவங்கி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை!
அந்த வகையில் வன்முறை நடந்த பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 14 முதல் தினசரி இரண்டு மணி நேர இடைவெளியில் தளர்த்தப்பட்டு வருகிறது. இதனுடன் கடந்த ஏப்ரல் 25ம் தேதியன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 9 மணி நேரத்திற்கு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்த தளர்வு காலங்களில் பால், காய்கறிகள், மருந்துகள் கடைகள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்டவை மட்டுமே திறக்கப்பட்டன.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், தற்போது கார்கோனில் பகல் நேர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கார்கோனில் முழு அமைதி நிலவுகிறது. பகல் நேரத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. ஆனால் முன்னெச்சரிக்கையாக இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும். அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்த பிறகு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவது குறித்து முடிவு செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.