ஈஸ்வரியை அடிக்க கை ஓங்கிய ராதிகா.. துடித்து போன கோபி – ரணகளமான பாக்கியலட்சுமி சீரியல்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி எவ்வளவோ முயற்சி செய்தும், கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் அடுத்ததாக செழியனும் ஈஸ்வரியும் ராமமூர்த்தியை தேடி வர, திருமண கோலத்தில் கோபியை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், ராமமூர்த்தி கோபி கல்யாணத்தை நிறுத்த வர, ஆனால் அப்பா என பார்க்காமல் கோபி ராமமூர்த்தியை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். பாக்கியா இதற்கு மேல் நீங்கள் பேசி அவமானப்பட வேண்டாம் என சொல்லி கெஞ்சி கேட்க, ராமமூர்த்தி அமைதியாக திரும்பி வருகிறார். இந்நிலையில் அடுத்தடுத்து கோபி குடும்பத்தினர் வந்து சண்டை போட அதனால் ராதிகா பயங்கர கோவத்தில் இருக்கிறார். இவ்வளவு பிரச்சனைக்கு நடுவே பாக்கியா தனக்கு சமையல் ஆர்டர் முக்கியம் என சொல்கிறார்.
இந்நிலையில் கோபி பாக்கியா இங்கிருந்து போக கூடாது எனவும் காலை வரை இருந்து கல்யாணத்தை பார்க்க வேண்டும் என சொல்கிறார். இப்படி கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்து வரும் எபிசோடில் எழில், செழியன், ஈஸ்வரி ராமமூர்த்தியை காணாமல் தேடி வருகின்றனர். ராமமூர்த்திக்கு போன் செய்ய அப்போது மண்டபம் பெயரை சொல்லி அவர் வர சொல்கிறார். அங்கே கோபி ராதிகாவின் திருமணம் என தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதிரடியாக நேர மாற்றம் செய்யப்படும் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஈஸ்வரி ராதிகாவை பயங்கரமாக பேச அதையெல்லாம் ராதிகாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவரை அடிக்க ஈஸ்வரி கை ஓங்க, ராதிகா பதிலுக்கு கையை பிடிக்கிறார். விட்டால் அங்கு பெரிய பிரளயமே உண்டாகிவிடும். இந்நிலையில் இவ்வளவு சண்டைகளுக்கு பின் கோபி ராதிகாவின் திருமணம் நடக்குமா என்பது எல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் கதையில் பெரிய திருப்பமாக ராதிகாவின் கல்யாணத்தை நிறுத்த ராஜேஷ் வர இருக்கிறார். அதனால் கோபியின் பாடு திண்டாட்டமாக இருக்க போகிறது. அதனால் அடுத்த வார எபிசோட் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்